தெரு நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில், அதிகரித்துள்ள நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.


கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பஸ் ஸ்டாப், கடைவீதி, கொடிக்கால் தெரு ஆகிய இடங்களில் அதிகளவு தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையோரம் இடங்களில் வீசப்படும், கோழி கழிவுகளை உண்பதால் நாய்கள் ஒன்றை ஒன்று கடித்து கொண்டு, சாலை வழியாக

செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல

வேண்டியுள்ளது. மேலும் சில நேரங்களில் வாகனங்களில் இருந்து விழுந்து விடுகின்றனர். எனவே,

பஞ்சாயத்து பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை, கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை

பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.

Advertisement