இந்தியாவுக்கு மிரட்டல் வந்தால்...: ராஜ்நாத் எச்சரிக்கை

6


புதுடில்லி: இந்திய நலனுக்கு அச்சுறுத்தல் வந்தால், எந்த பெரிய நடவடிக்கையையும் எடுக்க தயங்க மாட்டோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுக்னா ராணுவ மையத்தில் நடந்த ஆயுத பூஜை விழாவிற்கு பிறகு ராஜ்நாத் கூறியதாவது: வெறுப்பு உணர்வுடன் எந்த நாட்டையும் இந்தியா தாக்கியதில்லை. நம்மை அவமானப்படுத்தும்போது அல்லது நமது ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சி செய்யும்போது தான் நாம் போரிட்டு உள்ளோம். இதனை நாம் ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வருகிறோம். இந்த பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாப்போம்.


இருப்பினும், நமது நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், மிகப்பெரிய நடவடிக்கையை எடுக்க தயங்க மாட்டோம். ஆயுதங்களும், தளவாடங்களும் முழு பலத்துடன் பயன்படுத்தப்படும் என்பதற்கு சாஸ்திர பூஜை சாட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement