அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கல்



கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் புரட்டாசி திருவிழாவையொட்டி, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் அருகே, தனியார் திருமண மண்டபத்தில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன்,

எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், முன்னாள் பஞ்., தலைவர் சேகர் உள்பட

நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement