வாழ்த்து சொன்ன விஜய்க்கு வரவேற்பு தெரிவித்தார் எல்.முருகன்

1

மதுரை: 'விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக் கூறாத விஜய், ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்னதை வரவேற்கிறேன்,' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.


@1brமதுரையில், நிருபர்கள் சந்திப்பில், எல்.முருகன் கூறியதாவது: சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது குடி தண்ணீர் இல்லாமலும், ஆம்புலன்ஸ் இல்லாமலும் 5 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதை பற்றி வாய் திறக்கவே இல்லை. ரயில்வே துறை பா.ஜ., ஆட்சியில் தான் வளர்ந்துள்ளது. பேப்பரில் மட்டும் படித்து கொண்டிருந்த புல்லட் ரயில், இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வேதனையான ஆட்சி




மெரினாவில் நடந்த உயிரிழப்புகளை மறைக்க ரயில் விபத்தில் தி.மு.க., நாடகமாடுகிறது. ரயில் விபத்தில் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., கூட்டணி கட்சிகள் அவதூறு பரப்புகின்றன.
ரயில்வே வேலை செய்யவில்லை என்று இண்டியா கூட்டணி தோற்றத்தை உருவாக்குகிறது.


தி.மு.க., ஆட்சி முழுக்க, முழுக்க வேதனையான ஆட்சி. தமிழர் ஒவ்வொருவரும் வேதனைப்படும் ஆட்சியாக இருந்து கொண்டு இருக்கிறது. மின் கட்டணம் பல முறையில் உயர்ந்துள்ளது. ரூ.600 வந்த வீட்டில், இன்று ரூ.6 ஆயிரம் பில் வருகிறது. சொத்து வரி உயர்ந்துள்ளது.


ஜனநாயக நாடு




பத்திர கட்டணம் உயர்ந்துள்ளது. ஒரு பக்கம் வரி மேல் வரி உயர்ந்துள்ளது. இன்னொரு பக்கம், மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் உள்ளன. கிராமங்கள் மற்றும் பள்ளிகள் வரை போதைப்பொருட்கள் சென்று சேர்ந்துள்ளது.


விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக் கூறாத விஜய், ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்னதை வரவேற்கிறேன். விஜயின் கொள்கை என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Advertisement