குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், எஸ்.பி., தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கினார். கூட்டத்தில், காவல் நிலையங்களில் உள்ள குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் எஸ்.பி., கேட்டறிந்தார்.

தொடர்ந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், டி.எஸ்.பி., தேவராஜ், மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement