இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிய 'டிஎன் அலர்ட்' செயலி அறிமுகம்

கள்ளக்குறிச்சி: இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள, அரசின் 'டிஎன் அலர்ட்' செயலியை பதிவிறக்கும் செய்து பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:

இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செய்திகளை பெறவும், தமிழக அரசு 'டிஎன் அலர்ட்' செயலியை உருவாக்கியுள்ளது. இதனை பிளே ஸ்டோரிலிருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வானிலை தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் துல்லியமாக வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தற்போதைய வானிலை தகவல், வானிலை முன்னறிவிப்பு, மழை இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை, மின்னல் எச்சரிக்கை, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான வானிலை அறிவிக்கை, அடுத்த 3 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு செய்யப்படுகிறது.

அதேபோல் பெறப்பட்ட மழையின் அளவு, அணைகளின் நீர்மட்டம், வெள்ளம் பாதிக்கப்படகூடும் என கருத்தப்படுகிற வசிப்பட பகுதிகள் குறித்த விபரங்கள் என பொதுமக்களின் பாதுகாப்புக்கான தகவல்களை பெற முடியும். மேலும் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை பதிவு செய்வதற்கான வசதியும் உள்ளது.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் 'டிஎன் - அலர்ட்' செயலியை பதிவிறக்கும் செய்து பயன்பெறலாம்.

Advertisement