மின்சாரம் தாக்கி இளைஞர் பலி: மயிலாடுதுறையில் சோகம்!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பியூஸ் போடுவதற்காக மின்கம்பத்தில் ஏறி ஒயரை சீவியபோது மின்சாரம் தாக்கி சுதாகர் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா செருகுடி மேல தெருவை சேர்ந்தவர் மருதன். இவரது மகன் சுதாகர்.42. தனியார் எலக்ட்ரீசியன். இவர் இன்று மழை பெய்து கொண்டிருந்த நிலையில் மின் கம்பத்தில் ஏறி பியூஸ் போடுவதற்காக ஒயரை சிவி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சுதாகருக்கு கீதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement