பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
ஸ்டாக்ஹோம்: நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பை பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுக்காக 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கப்படுகிறது. இந்தாண்டு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று( அக்.,14) அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதானது, அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் நகரில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் சிகாகோ பல்கலையின் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பை பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
வாசகர் கருத்து (3)
Sundaram Muthiah - Singapore,இந்தியா
14 அக்,2024 - 17:55 Report Abuse
அட மக்குகளா அந்த 5 பேரில் ஒருவர் நோபல் பரிசு வென்றவர். ஞான சூனியன்கள்
0
0
Reply
Sankar Ramu - Carmel,இந்தியா
14 அக்,2024 - 16:04 Report Abuse
தமிழகத்துக்கு விலையில்லா பொருளாதாரம் தந்த அந்த ஐந்து வெளிநாட்டு நிபுநர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? ?
0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
14 அக்,2024 - 15:57 Report Abuse
தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியதற்காக தமிழக நிதியமைச்சருக்குக் கொடுத்திருக்கலாம் .....
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement