ஊர் உள்ளவரை...கார் உள்ளவரை... பாலமே பாதுகாப்பு!
சென்னை; சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன் யோசனையாக இன்றே வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை மக்கள் நிறுத்த ஆரம்பித்துள்ளனர்.
@1brமழையும் வெயில் இவற்றில் எது வந்தாலும் முதலில் சென்னை தான் அனைவரின் மனதுக்கும் நினைவு வரும். வெயிலுக்கும், மழைக்கும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தலைநகர் சென்னை சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல. அதிலும் மழை காலத்தில் சொல்லவே வேண்டாம்.
முக்கிய பகுதிகளாக கருதப்படும் மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, போரூர், கிழக்கு தாம்பரம், முடிச்சூர் போன்ற இடங்களில் மழை வெளுத்து வாங்கினால் வீடுகள், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கிய சம்பவங்கள் பல உண்டு. எனவே ஒவ்வொரு முறை மழை முன் எச்சரிக்கையின் போது சொகுசு கார்கள் வைத்திருப்போர், நகரின் ஏதேனும் ஒரு இடத்தில் உயர்ந்து காணப்படும் மேம்பாலத்தில் நிறுத்திவிட்டு வந்துவிடுவர்.
மழை ஆரவாரம் எல்லாம் ஓய்ந்த பின்னர், சாவகாசமாக கார்களை திரும்பவும் தமது வீடுகளுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ எடுத்துச் சென்றுவிடுவர். இந் நிலையில் சென்னையில் இன்று முதலே மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கை, அக்டோபர் 16ம் தேதி அதி கனமழை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் என்னும் போது 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகும்.
ரெட் அலர்ட்டை வானிலை மையம் வெளியிட்டு உள்ள நிலையில் சென்னையில் கார் வைத்திருக்கும் பலரும் இப்போது வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். சிலர் இன்றே மல்டி லெவல் பார்க்கிங் உள்ள பகுதிகளில் கார்களை நிறுத்த ஆரம்பித்துள்ளனர்.
வேளச்சேரி மற்றும் அதன் சற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், கார்களை அங்குள்ள உயரமான மேம்பாலத்தின் ஓரம் நிறுத்தி இருக்கின்றனர். பாலத்தின் ஒரு பகுதியில் கார்கள் நீண்ட தூரம் அணி வகுக்க ஆரம்பித்து இருக்கின்றன. பொருள் இழப்பையும், மன உளைச்சலையும் தவிர்க்கும் பொருட்டே இப்படி ஒரு நடவடிக்கை என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.
சென்னை மக்கள் என்றுமே உஷார் என்று பலரும் கூறுவது உண்டு. அதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் கார்களை பார்க்கிங் செய்து சபாஷ் சொல்ல வைத்திருக்கின்றனர் சென்னை மக்கள்.
உரிமையாளர்களுக்கு அபராதம்
வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்
வாசகர் கருத்து (18)
venugopal s - ,
14 அக்,2024 - 18:37 Report Abuse
இரண்டு மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை அந்த மாநில பாஜக அரசு கையாண்ட விதத்தை விட திறம்படவே தமிழக அரசு கையாளும் என்ற நம்பிக்கை உள்ளது!
0
0
Reply
nagendhiran - puducherry,இந்தியா
14 அக்,2024 - 18:18 Report Abuse
ஐம்பது ஆண்டுகள் மேல் திராவிட அரசுகளின் சாதனை இது? நாம் தான் அனுபவித்து ஆகனும்?
0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
14 அக்,2024 - 18:02 Report Abuse
தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் அமர்ந்து ஏறத்தாழ 60 ஆண்டுகள் ஆகி விட்டது. இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட இவர்கள், மழை பெய்தால் எளிதாக மழைநீர் வழிந்தோடும் கட்டமைப்புகளை எந்த ஒரு மாநகராட்சியிலும் செய்யவில்லை. ஒரு சில இடங்களில் கட்டமைப்புகளை உருவாக்கி இருந்தாலும், லஞ்ச ஊழல் காரணமாக, கட்டமைப்பு திட்டங்கள் அனைத்தும் தரமற்று சிதைந்து போனதுதான் கண்ட பலன். மக்கள் சிந்திக்க வேண்டும். இல்லையேல் மழை வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து அழிவையே சந்திக்க நேரிடும்.
0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
14 அக்,2024 - 17:49 Report Abuse
நீங்க கொடுக்கிற ஐடியாவிலே இந்நேரம் வட்டம் மாவட்டம் கவுன்சிலர் எல்லோரும் கூடி தங்களுக்குள் ஏரியாவை பிரித்துக்கொண்டு கார் ஓனர்களிடம் வசூல் செய்ய ஆரம்பித்திருப்பார்கள். வசூல் மன்னர்கள் ஆயிற்றே விட்டுவிடுவார்களா. எரிகிற வீட்டில் புடிங்கியவரை ஆதாயம் என்ற கொள்கையில் தீராத பற்று உடையவர்கள் அன்றோ திராவிட செம்மல்கள்
0
0
Reply
nv - ,
14 அக்,2024 - 17:46 Report Abuse
திராவிட மாடல் பார்க்கிங்!! வருடாந்திர நிகழ்வு!! ஆனால் நம்ம தலைவர் எல்லாம் சரிசெய்ய பட்டது என்று ரீல்
0
0
Reply
venugopal s - ,
14 அக்,2024 - 16:53 Report Abuse
எல்லோரும் கூமுட்டைகள் என்பது இங்கு காற்றில் கம்பு சுற்றும் வேகத்திலேயே தெரிகிறது!
0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
14 அக்,2024 - 16:51 Report Abuse
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்ரமித்து குப்பை கிடங்கு ஆக்கி அதற்குள் நீர் நுழையும் இடங்களை மூடியதே மடிப்பாக்கம் பள்ளிக்கரணை போன்ற இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட காரணம்
0
0
Reply
N S Sankaran - Chennai,இந்தியா
14 அக்,2024 - 16:48 Report Abuse
25 cm மழை பெய்தாலும் ஒன்றும் ஆகாது என்று உடார் விட்டவனெல்லாம் மக்களுக்கு அவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையை இந்த செய்தியை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். பேசாமல் சென்னை மாநகராட்சி கட்டணம் வசூலிக்கலாம்.
0
0
Reply
ganapathy - Dindigul,இந்தியா
14 அக்,2024 - 16:36 Report Abuse
"வரலாறு காணாத மழை பெஞ்சா நாங்க என்ன பண்ணுறது"...பேசாமா மாப்பிள்ளை பேரன் குடும்பத்தோட அமெரிக்காதான் திரும்பவும் போகணும்
0
0
Reply
கல்யாணராமன் - Chennai,இந்தியா
14 அக்,2024 - 16:35 Report Abuse
அலங்கோலமாக ஆட்சி புரிவதை கண்டுகொள்ளாமல் மீண்டும் தங்களையே தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகதான் மகளிர் உரிமை தொகை, மகளிர் இலவச பஸ் பயணம், மாணவ, மாணவிகளுக்கு ஏதோ ஒரு திட்டத்திற்கு நாமகரணம் சூட்டி அதன் மூலம் மாதா மாதம் ஓர் உதவி தொகை கொடுக்கப்படுகிறது. எனவே வெள்ளம் வந்தால் என்ன? சாலை மோசமாக இருந்தால் என்ன? கஞ்சா. குடி குடித்துவிட்டு கலாட்டா செய்தால் என்ன? போதை பொருட்கள் நடமாடினால் என்ன? நாடு எக்கேடு கேட்டுப்போனால் எங்களுக்கென்ன? எங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக்கொண்டு இருக்கிற வரை மீண்டும் உங்களுக்கே ஓட்டு போடுமிறோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர்.
0
0
peeyesyem - coimbatore,இந்தியா
14 அக்,2024 - 18:16Report Abuse
100% correct I have never seen such peoples attitude if this situation continues NO GOD can save TAMILNADU
0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement