மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: மாணவர் கைது
புளியந்தோப்பு,புளியந்தோப்பைச் சேர்ந்த 46 வயது பெண், அம்பத்துாரில் உள்ள மருத்துவமனையில் துாய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
அவருடன், அவரது தாயும், மனநலம் பாதிக்கப்பட்ட அக்காவும் வசிக்கின்றனர்.
அப்பெண், மருத்துவமனைக்கு இரவு பணிக்கு செல்லும்போது, அதே பகுதியைச் சோந்த காலீத், 21, என்பவர், அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, மனநலம் பாதிக்கப்பட்ட அக்காவை பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காலீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement