சாலையோர ஆக்கிரமிப்பு சூரம்பட்டியில் அகற்றம்

ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி பகுதியில், சாலையோர ஆக்கிரமிப்பு மற்றும் கழிவு நீர் சாக்கடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதன்படி, 47வது வார்டு சூரம்பட்டி, தெற்கு போலீஸ் ஸ்டேஷன், திரு.வி.க.சாலை பகுதிகளில் சாலையோரம், சாக்கடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, துார்வாரும் பணி நேற்று நடந்தது. மழையால் உடனடியாக பாதிக்கப்படும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், சாலை மற்றும் சாக்கடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகள், மேற்கூரை என, 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Advertisement