எம்.ஓ.பி.வைஷ்ணவ் கல்லுாரி பால் பேட்மின்டனில் முதலிடம்

சென்னை, அக். 15--

சென்னை பல்கலைக்கு உட்பட கல்லுாரிகளை, 'ஏ' மற்றும் 'பி' என, இரு மண்டலங்களாக பிரித்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து, மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகளும் நடக்கின்றன.

அதன்படி, மண்டலங்களுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டி, எஸ்.ஏ., கலை கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.

இதில், எம்.ஓ.பி. வைஷ்ணவ், எத்திராஜ், டபிள்யூ.சி.சி., - ஜெபாஸ் உள்ளிட்ட கல்லுாரி மற்றும் இணைப்பு அணிகள் மோதின. 'லீக்' முறையில் நடந்து இப்போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவ அணி, 35 - 19, 35 - 26 என்ற கணக்கில் எத்திராஜ் அணியை வீழ்த்தியது.

மற்றொரு போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவ் அணி, 35 - 16, 35 - 27 என்ற கணக்கில் 'ஏ' மண்டல இணைப்பு அணியையும், 35 - 23, 35 - 31 என்ற கணக்கில் 'பி' மண்டல இணைப்பு அணியையும் தோற்கடித்தது.

அனைத்து போட்டிகள்முடிவில், எம்.ஓ.பி.வைஷ்ணவ் அணி முதலிடத்தையும், எத்திராஜ் மற்றும் 'பி' மண்டல இணைப்பு அணிகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் கைப்பற்றின.

Advertisement