35வது மாடியில் இருந்து குதித்து கொரிய சிறுவன் தற்கொலை

திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் ஓ.எம்.ஆர்., சாலையில், 40 மாடிகள் உடைய தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இதில், 35வது மாடியில், கொரியாவைச் சேர்ந்த யாங் கியூ லிம், இவரது மனைவி சுஜாங் சிங், மகன் சினோ லிம், 15, ஆகியோர், இரண்டரை மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

யாங் கியூ லிம், மறைமலை நகரில் உள்ள கொரிய நிறுவனத்தில், மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், அலுவலக வேலையாக, கடந்த வாரம் தென் கொரியா சென்றுள்ளார். இப்பகுதி தனியார் பள்ளியில், மகன் சினோ லிம், 9ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, செக்யூரிட்டி பார்த்தபோது, சினோ லிம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

கேளம்பாக்கம் போலீசார், சிறுவன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பெற்றோர் தன்னை சரியாக கவனிக்காததால் தற்கொலை செய்ததாக அவர் எழுதிய கடித்ததில் தெரிந்தது.

Advertisement