மருத்துவ கல்லுாரியில் மகளை சேர்க்க வந்த தந்தை மரணம்

பெருந்துறை, அக். 15-
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியை அடுத்த, செட்டிபாளையம், ஆத்துப்பாளையம், மணத்தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன், 65; விவசாயியான இவரின் மகள் ஆண்டாள், ௧௮; இவருக்கு பெருந்துறை-ஈரோடு ரோட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது.
கல்லுாரியில் நேற்று மாணவர் சேர்க்கை நடந்தது. இதற்காக மகளுடன் முருகேசன் வந்திருந்தார். காலை, 11:00 மணியளவில் முருகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement