மாற்றுத்திறனாளிகள் சங்க பேரவை கூட்டம்

கமுதி: கமுதி கோட்டைமேட்டில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பேரவை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் வில்சன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேஷ், துணைத்தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். கமுதி வட்டார புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவர் கருங்குளம் சந்திரன், செயலாளர் நீராவி முருகேசன், பொருளாளர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மற்ற மாநிலங்கள் போன்று ரூ.6000 உதவித் தொகை வழங்கவும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சலுகை வழங்கவும், மாற்றுத்திறனாளிகள்​ அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கவும்,ரேஷன் கார்டுகளை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பட்டியலில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் பொருளாளர் முத்துமாணிக்கம் நன்றி கூறினார்.

Advertisement