அருப்புக்கோட்டையில் திடீரென்று தீப்பற்றிய கார்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்ற கார் திடீர் தீ பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.

திருப்பூர் மாவட்டம் பெருமாள்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 47, அரசு பஸ் டிரைவர். இவர் தனது காரில் உறவினர் மனோஜை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்த்துவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

காரை சுரேஷ் ஓட்டியுள்ளார். மாலை 4:00 மணி அளவில் அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் செட்டிகுறிச்சி விலக்கு அருகே திடீரென்று காரின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பி தீ பற்றி எரிந்தது. காரை ரோட்டில் நிறுத்திவிட்டு சுரேஷ் ஓடி விட்டார்.

காரின் முன் பகுதி முழுவதும் எரிந்தது. தீயணைப்பு துறை யினர் தீயை அணைத்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement