மாநகராட்சியுடன் 46 புதுார் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு
ஈரோடு, அக். 15-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், 46 புதுார் பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சபை இணை செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் மனு வழங்கி
கூறியதாவது:
மொடக்குறிச்சி யூனியனுக்கு உட்பட்ட, 46 புதுார், லக்காபுரம் பஞ்சாயத்துக்கள் உள்ளன. இப்பகுதி முற்றிலும் கிராமப்பகுதியாக, விவசாயம் சார்ந்து உள்ளது. ஈரோடு மாநகராட்சியுடன், ௪௬ புதுார் பஞ்சாயத்தை இணைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 46 புதுார் பஞ்.,ல், 14,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இவர்களில், 2,000 பேருக்கு மேல், 100 நாள் வேலை திட்டத்தை நம்பி உள்ளனர். மாநகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை திட்டப்பணி மறுக்கப்படும். வரிகளும் பல மடங்கு உயர்ந்து, மக்கள் பாதிப்பார்கள். எனவே மாநகராட்சியுடன் இப்பஞ்சாயத்தை இணைக்க கூடாது. இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement