ராமேஸ்வரம் உஜ்ஜயினி அம்மன் தீமிதி விழா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நவராத்திரி விழாவிற்கு நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உபகோயிலான உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து கோயில் குருக்கள் கும்ப கலசத்தை தலையில் சுமந்தபடி பக்தி பரவசத்துடன் கோயில் நான்கு ரதவீதி, பத்திரகாளி அம்மன் கோயில் தெருவில் உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

இதன் பின் கோயில் முன்பு வளர்க்கப்பட்ட தீயில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement