பேராபட்டி ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி

சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பன்குளத்திலிருந்து பேராபட்டி செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ,வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் இருந்து பேராபட்டி செல்லும் ரோடு 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இந்த ரோடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை. மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதே ரோட்டில் பட்டாசு கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வருகின்ற அனைத்து வாகனங்களும் தட்டு தடுமாறிய வர வேண்டி உள்ளது. பேராபட்டியிலிருந்து துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி செல்கின்ற ரோடு குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு சிரமத்தினை ஏற்படுத்துகிறது.

கவிதா, ஊராட்சி தலைவர், பேராபட்டி ரோடு சீரமைப்பதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது விரைவில் நபார்டு திட்டத்தின் கீழ் ரோடு சீரமைக்கப்படும், என்றார்.

Advertisement