விஸ்வ ஜனசக்தியினர் கலெக்டரிடம் கோாிக்கை

கடலுார்: விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவையின் கடலுார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், கடலுார் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனு.

விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தொழில் அடிப்படையில் இந்து கம்மாளர், பொற்கொல்லர், தச்சர், சிற்பி என சில மாவட்டங்களில் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

பல மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் பட் டியலில், இந்து விஸ்வகர்மா என வழங்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்திலும், இந்து விஸ்வகர்மா என சான்றிதழ் வழங்க வேண்டும்.

மேலும், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியுள்ள விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

விஸ்வகர்மாவின் ஜெனன தினத்தை விஸ்வகர்ம ஜெயந்தி நாளாக கொண்டாடுகிறோம்.

அந்த தினத்தை பொது விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement