மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மந்தாரக்குப்பம்: வேகாக்கொல்லை ஊராட்சியில் நடந்த, நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாமில், தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வேகாக்கொல்லை ஊராட்சி தலைவர் சங்கரி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் சண்முகவேல், செயலாளர் ராஜூ, பொருளாளர் ஞானவேல் முன்னிலை வகித்தனர். ஜவகர் மெட்ரிக்பள்ளி முதல்வர் ஜோன் அலகெ்ஸ்மரியா வரவேற்றார். வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தனிதிறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

என்.எல்.சி., துணை பொதுமேலாளர் அருளழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் சார்லஸ், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தெய்வசிகாமணி சிறப்புரையாற்றினர். திட்ட அலுவலர் பாலமுருகன், உதவி திட்ட அலுவலர் சசிகுமார், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்

Advertisement