வீட்டில் புகுந்த பாம்பு பிடிப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சரவணபுரம் பகுதியில் தொடர் மழையால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது வீட்டினுள் நேற்று பாம்பு புகுந்ததை பார்த்த குடும்பத்தினர், வெளியே ஓடிவந்தனர்.

தகவலின்பேரில், கடலூர் பாம்புபிடி வீரர் செல்லா, கணேஷ் வீட்டில் இருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து, காப்பு காட்டில் விட்டார்.

Advertisement