ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை

கடலுார்: கடலுாரில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடையை வழக்கறிஞர் சந்திரசேகர் வழங்கினார்.

கடலுாரில் ஆயுதபூஜை யொட்டி, 500க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர் களுக்கு காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் இலவச சீருடை வழங்கினார். நிகழ்ச்சியில் மீனவ பிரிவு மாவட்ட தலைவர் கடல் கார்த்திகேயன், ஓ.பி.சி., மாநில செயலாளர் உமாபதி, இளைஞர் காங்., மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கலையரசன், வெங்கடேசன் மற்றும் காங், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement