அ.தி.மு.க.,வின் திட்டங்கள் கிடப்பில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேச்சு

சிறுபாக்கம்: மாநிலம் முழுவதும் அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் கிடப்பில் உள்ளதாக அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசினார்.

மங்களூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் அடரியில் நடந்தது. அ.தி.மு.க., மங்களூர் ஒன்றிய அவைத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் சந்திரபாபு, தங்கவேல், அய்யாசாமி, குமார், செல்வராணி முன்னிலை வகித்தனர். மங்களூர் மேற்கு ஒன்றிய செயலர் பாண்டியன் வரவேற்றார்.

கடலுார் மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மோகன், ஜெ., பேரவை மாநில துணை செயலர் அருளழகன், வர்த்தகரணி மாநில துணை செயலர் சக்திவேல் பேசினர். நிர்வாகிகள் மணிகண்டன், ராஜவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசுகையில், அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, மருத்துக் கல்லுாரிகள் திறப்பு, சாலை வசதிகள் உள்ளிட்ட சாதனை திட்டங்களை மக்களிடம் கூற வேண்டும்.

தமிழகத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனை ஒவ்வொரு வாக்காளர்களிடமும் அ.தி.மு.க.,வினர் கூறி, அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபட வேண்டும் என,கேட்டுக்கொண்டார்.

Advertisement