மனைவிக்கு மிரட்டல் கணவர் கைது

நடுவீரப்பட்டு: பண்ருட்டி களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் குமார், 45; இவரது மனைவி நிலவு, 37; கணவன் மனையிடையே ஏற்பட்ட பிரச்னை யில், 10 நாட்களாக நிலவு தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் குமார் தனது மனைவி நிலவை வீட்டிற்கு வருமாறுகூப்பிட்டார். அதற்கு நிலவு மறுத்ததால் ஆத்திரமடைந்த குமார், கத்தியால் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து குமாரை கைது செய்தனர்.

Advertisement