வாராந்திர குறைகேட்பு கூட்டம்

கடலுார்: கடலுார் கலெக்டர் அலு வலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கலெக் டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மனுக்கள் குவிந்தது.

அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன் உட்பட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை, நுழைவு வாயிலில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

Advertisement