சென்னையில் விடாது பெய்த கன மழை; குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு!


சென்னை: திருவள்ளூரில் பெய்த கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.



வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுவடையும் என்றும் அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.


மழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ள பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் கூடுதலாக பொக்லைன் இயந்திரங்களை நிலை நிறுத்த, நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முக்கிய ஏரிகளின் நீர்வரத்து விவரம் பின்வருமாறு:



* புழல் ஏரிக்கான நீர்வரத்து நேற்று 196 கன அடியாக இருந்த நிலையில், இன்று(அக்.,15) 277 கன அடியாக அதிகரித்துள்ளது.



* சோழவரம் ஏரிக்கு நேற்று, நீர்வரத்து இல்லாத நிலையில் இன்று 160 கன அடியாக அதிகரித்துள்ளது.



* செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து நேற்று 250 கன அடியாக இருந்த நிலையில் 260 கன அடியாக அதிகரித்துள்ளது.



* பூண்டி ஏரிக்கான நீர்வரத்து 650 கன அடியாக அதிகரித்துள்ளது.



* வீராணம் ஏரிக்கான நீர்வரத்து 1,423 கன அடியாக உயர்ந்துள்ளது.

Advertisement