9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் நிலவரம் இதுதான்: கணித்து சொன்னது வானிலை மையம்!
சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும், நேற்றிரவு கனமழை கொட்டியது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நல்ல மழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாது கொட்டியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், சைதாப்பேட்டை, கிண்டி என பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (அக்.,15) மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புகள் உள்ளன.
மழைநீர் தேங்கும் போது, சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும். ஆங்காங்கே பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (3)
sundarsvpr - chennai,இந்தியா
15 அக்,2024 - 13:25 Report Abuse
தேவைக்கு மேல் விளைச்சல் கண்டால் உபரியை தேக்கிவைத்து பிற இடங்களுக்கு அனுப்புகிறோம், அதுபோல் மழை நீரை தேக்கிவைத்து பிற இடங்களுக்கு ஏன் அனுப்ப யோசிக்க கூடாது? முடியாது என்று வாளாய் இருப்பது நகரங்கள் காணாமல் போய்விடும்.இயர்கையாக படைத்தல் காத்தல் அழித்தல் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்திடும் சக்தி மனித ஆத்துமாவிற்கு உண்டு. முயற்சி திருவினையாக்கும்
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15 அக்,2024 - 11:53 Report Abuse
இந்த தண்ணீர் பிரச்சினை இருக்கிறதே அது ஒரு விசித்திரமான பிரச்சினை. மழைக்காலத்தில் அதிக மழைபெய்து வெள்ளம் ஏற்பட்டு மக்களுக்கு பிரச்சினை. மழை இல்லா காலத்தில், வெயில் காலத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லா பிரச்சினை. மேலும், இரண்டு காலத்திலும் அரசு மக்களுக்கு ஒரு உதவியும் செய்யாது இருப்பது மிக மிக பெரிய பிரச்சினை.
0
0
ganapathy - Dindigul,இந்தியா
15 அக்,2024 - 12:32Report Abuse
காலத்தில் பெய்யும் மழையை ஏன் குறை கூறுகிறாய்? நீ ஏன் வரி கட்டும் அரசையும் ஓட்டு போட்டு தேர்தெடுந்த எம்எல்ஏவையும் கேள்வி காலங்காலமாக கேட்கவில்லை?
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement