பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? கனிமொழி கேள்வி

5

சென்னை: பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கிறதா? தி.மு.க., எம்.பி., கனிமொழி கேள்வி எழுப்பினார்.


சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற கண்டன கூட்டத்தில், கனிமொழி பேசியதாவது: இந்தியாவிலேயே அதிகளவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படும் மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், குஜராத். மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை கேள்வி கேட்கும் தகுதி பா.ஜ.,விற்கு இல்லை .

நாட்டில் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள். பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கிறதா, அவர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா? நாட்டில் உள்ள பெரும்பான்மை ஹிந்துக்களை ஏமாற்றுவதற்கு எடுக்கும் ஆயுதம் தான் மதம். இவ்வாறு கனிமொழி பேசினார்.

Advertisement