கனமழை எதிரொலி; பூமியில் இறங்கியது சென்னை அடுக்குமாடி; குடியிருப்போர் அச்சம்!

5


சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கியதால், அங்கு வசிக்கும் பொது மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது தற்போது ஒவ்வொன்றாக தெரியவந்து கொண்டு உள்ளது.


இதன்படி, மழை காரணமாக அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு திடீரென உள்வாங்கியது. 200க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இக்குடியிருப்பின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியதுடன், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அங்கிருக்கும் பொருட்களை அகற்றி வருகின்றனர். இது அங்கு குடியிருப்பவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement