கனமழை எதிரொலி; பூமியில் இறங்கியது சென்னை அடுக்குமாடி; குடியிருப்போர் அச்சம்!
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கியதால், அங்கு வசிக்கும் பொது மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது தற்போது ஒவ்வொன்றாக தெரியவந்து கொண்டு உள்ளது.
இதன்படி, மழை காரணமாக அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு திடீரென உள்வாங்கியது. 200க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இக்குடியிருப்பின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியதுடன், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அங்கிருக்கும் பொருட்களை அகற்றி வருகின்றனர். இது அங்கு குடியிருப்பவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (3)
NRajasekar - chennai,இந்தியா
15 அக்,2024 - 17:22 Report Abuse
நல்ல சிமென்ட் இல்லை மணல் தரமற்றது பில்டர்ஸ் 100% சதவிகிதம் லாபம் எதிர்பார்கின்றனர்
தனி வீடு நடுத்தர்மக்களுக்கு சாத்தியமில்லை பிளாட் தான் எப்படியோ பணம் . லோன் திரட்டி வாங்குகின்றனர். பில்டர் தரமற்று கட்டினாலும் அவர்களுக்கு அஸோஸிசேஷன் உண்டு. வாங்குமவர்களுக்கு எந்த வித supports ம் கிடையாது
0
0
Reply
Rajinikanth - Mylapore,இந்தியா
15 அக்,2024 - 16:46 Report Abuse
சென்னை முழுக்க உயர உயர கட்டிடங்களாக கட்டிக்கொண்டு இருக்கின்றனர். அவையெல்லாம் பாதுகாப்பானதா இல்லையா என்று ஓரிரு வருடங்கள் சென்றால் தன் தெரிய வரும். இது போல உள் வாங்குவது, விரிசல்கள், நிலநடுக்கத்தை தாங்கும் திறன் இல்லாமை, எல்லாம் வெளி வரும். மக்கள் ஜாக்கிரதை.
0
0
chennai sivakumar - chennai,இந்தியா
15 அக்,2024 - 17:26Report Abuse
பழைய முகலிவக்கம் போல ஆகாமல் இருக்க வேண்டும்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement