இலவச அரிசி வழங்கும் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரேஷன் கார்டுகளுக்கு மாதாந்திர இலவச அரிசி வழங்கும் திட்டத்தினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் சிவப்பு கார்டுகளுக்கு 20 கிலோ, மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ வீதம் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதாந்திர இலவச அரிசி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தினை அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., நிர்வாகிகள் கலியபெருமாள், சையது, சிவக்குமார், ஜெயக்குமார், சிதம்பரநாதன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement