உதவி கேட்ட சிறுமிக்கு தொல்லை; சென்னையில் போலீஸ்காரர் கைது

13


சென்னை: வழிதவறி விட்டதாக உதவி கேட்ட 13 வயது சிறுமிக்கு பட்டினப்பாக்கம் போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செய்யப்பட்டார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் வழி மாறிவந்த சிறுமி ஒருவர், அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அவர், சிறுமியை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து செல்லாமல் போலீஸ் பூத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.



அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த புகார் படி, பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement