சத்தீஸ்கர் என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதனை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் கங்காலுார் காவல்நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்கினர்.

பதிலுக்கு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் இருந்து தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மேலும் தீவிர வேட்டை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

Advertisement