கொங்கலம்மன் கோவில் தைப்பூச விழா இன்று துவக்கம்

ஈரோடு: ஈரோடு கொங்கலம்மன் கோவிலில் தைப்பூச தேர்த்
திருவிழா இன்று பூச்சாட்டுடன் தொடங்குகிறது.


ஈரோடு கொங்கலம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா இன்று இரவு 8:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. நாளை காலை 5:30 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர். 3 காலை 10:00 மணிக்கு மூலவர் எதிரில் உள்ள கோவில் கொடிமரத்தில் கோவில் பூசாரிகள் திருவிழா கொடியேற்ற உள்ளனர். வரும், 7 மாலை 6:30 மணிக்கு கோவில் கரகமும், 9 காலை 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ல் தேரோட்டம் நடக்கிறது. காலை 8:45 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பின்னர் நிலை வந்து சேருகிறது. 12 காலை 8:00 மணிக்கு விடையாற்றி உற்சவம், மஞ்சள் நீராடல், அம்மன் வீதி உலாவும், காலை 11:00 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், மாலை 6:00 மணிக்கு தெப்போற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் திலகவதி தலைமையில் செய்கின்றனர்.

Advertisement