தொழிலாளி மீது போக்சோ வழக்கு
ஈரோடு: ஈரோட்டில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி மீது போக்சோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு சென்னிமலை சாலை முத்து குமாரசாமி வீதியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் பரணிதரன்,30; கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து, பரணிதரனை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement