சர்க்கரை உற்பத்தி கடந்த மாதம் சரிவு

புதுடில்லி:இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 2025ம் ஆண்டு பருவத்தில், 12 சதவீதம் குறைந்து, 2.7 கோடி டன்னாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்ட்ரம் பகுப்பாய்வு நிறுவனத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 2025ம் ஆண்டு பருவத்தில், குறிப்பிடத்தக்க சரிவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது முந்தைய ஆண்டின் 3.18 கோடி டன்னில் இருந்து 2.7 கோடி டன்னுக்கும் குறைவாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இது உற்பத்தியில் குறிப்பிடத்தக்க 12 சதவீதம் குறைவை குறிக்கிறது.
எத்தனால் தயாரிப்புக்காக கரும்புகளை திருப்புதல் மற்றும் முக்கிய உற்பத்தி மாநிலங்களில் கரும்பு குறைவாக கிடைப்பது உள்ளிட்டவை இதற்கான முதன்மையான காரணமாக கூறப்படுகிறது.
இந்த பின்னடைவுகள் இருந்தபோதிலும், சர்க்கரை விலைகள் வலுவாகவே உள்ளன. இதன்படி, உத்தர பிரதேசத்தில் விலைகள் டன் ஒன்றுக்கு 40,000 ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி, நாட்டின் சர்க்கரை உற்பத்தி குறிப்பிடத்தக்க சரிவை கண்டுள்ளது. மொத்த உற்பத்தி கடந்த பருவத்தின் இதேகாலத்தில் 1.88 கோடி டன்னாக இருந்த நிலையில், தற்போது 1.65 கோடி டன்னாக குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும்
-
முதல்வர் மம்தா தாண்டியா நடனம்: வீடியோ வைரல்
-
குல்தீப் 'நம்பர்-3': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
-
உலக டெஸ்ட்: ரூ. 45 கோடி இழப்பு: பைனலுக்கான டிக்கெட் விற்பனையில்
-
இந்தியாவுக்கு 4 பதக்கம்: உலக குளிர்கால விளையாட்டில்
-
பெங்களூரு வெளியேறியது ஏன்: கேப்டன் மந்தனா விளக்கம்
-
கேரள முதல்வர் பினராயுடன் செல்பி : மேலும் மேலும் காங்கிரசை கடுப்பேற்றும் சசிதரூர்