குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

புதுச்சேரி: லாஸ்பேட்டையில், நரிக்குறவர் சமுதாய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி எய்டர் பவுண்டேஷன் இந்தியா சார்பில், லாஸ்பேட்டையில் உள்ள நரிக்குறவர் சமுதாயத்தில் பிறந்த 10 ஏழை குழந்தைகளுக்கு, நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. எய்டர் பவுண்டேஷன் நிறுவனர் மிஷேல் தலைமை தாங்கினார்.

அன்னலட்சுமி திருநங்கை சமுக நல அமைப்பின் நிறுவனர் கிரிஜா, சரோஜா அறக்கட்டளை நிறுவனர் ஸ்டீபன் ராயப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நல உதவிகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில், இதயமணி, வாஞ்சிலிங்கம், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement