குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சுமுக தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்
கரூர்: 'குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக, போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்' என, காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் ராஜராம் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும், 30க்கும் மேற்பட்ட வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதை சட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. இந்-தியா விவசாய விளை பொருளுக்கு குறைந்த-பட்ச ஆதரவு விலை சட்டம் இயற்றக்கூடாது என பல உலக நாடுகள் நெருக்கடி கொடுத்து வரு-வதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதை மீறி சட்டம் இயற்றினால் பல்வேறு சிக்கல் நமது நாட்டிற்கு ஏற்படும் என இந்திய விவசாய சங்கங்-களுக்கு தெரியும்.
மேலும், எம்.எஸ்., சுவாமிநாதன் வழிகாட்டு-தல்படி கொள்முதல் விலை அறிவிக்கப்படுவ-தாக மத்திய அரசு கூறினாலும், விவசாய செலவு முழுவதுமாக சேர்க்கப்படுவது கிடையாது. எனவே இந்திய விவசாய சங்கத்திற்கு நிலை-மையை எடுத்து கூறி சுமுக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.