சேலம் பழைய சாலையில் போர்டுகளை மறைக்கும் மரக்கிளைகள்


கரூர்: கரூர் மாநகரை சுற்றி, சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலைகளும் செல்கின்றன. அதில், முக்கிய பிரிவுகளில் நெடுஞ்சாலை துறை சார்பில், ஊர் பெயர்கள், கிலோ மீட்டர் விபரம், செல்ல வேண்டிய வழி ஆகியவை குறித்த தகவல்களுடன் வழிகாட்டி போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பல சாலை-களில் வழிகாட்டி போர்டுகளை மரக்கிளைகள் மறைத்துள்ளன.


இதனால், வெளி மாநில லாரி ஓட்டுனர்கள், சுற்-றுலா பஸ், வேன் மற்றும் கார் டிரைவர்கள் வழி-காட்டி போர்டுகளில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கரூர்-சேலம் பழைய சாலை, ராமேஸ்வரப்பட்டி பிரிவு, செம்மடை பிரிவு அருகே, ஊர் பெயர்கள் கொண்ட போர்டு மீது மரக்கிளைகள் வளர்ந்துள்-ளதால், அவை மறைக்கப்பட்டுள்ளன.
எனவே, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை-களில் வைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி போர்டு-களை மறைக்கும், மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

Advertisement