கொல்லிமலையில் ஈர நில நாள் தின விழா

சேந்தமங்கலம்: கொல்லிமலை வனத்துறை சார்பில், உலக ஈர நில நாள் தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது. உதவி வன அலுவலர் சான் நவாஸ் கான் தலைமை வகித்தார்.


வனச்சரகர்கள் சுகுமார், பழ-னிசாமி, முருகவேல், பிரவின் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். நாமக்கல், ராசிபுரம், சேந்த-மங்கலம் அரசு கல்லுாரி, பள்ளிகளில் இருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து-கொண்டனர். அவர்களுக்கு, கட்டுரை, பேச்சு, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, கல்லுாரி மாணவர்கள், ஆகாய-கங்கை நீர் வீழ்ச்சியில் மட்காத குப்பைகளை சுத்தம் செய்ததுடன், சுற்றுலா பயணிகளுக்கு ஈர நில தினம் குறித்தும், வனத்தை பாதுகாப்பது குறித்தும் விளக்கமளித்தனர்.

Advertisement