மாணவியை கடத்திய வழக்கில் 6 பேர் கைது


ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம், மதுரைவீரன் கோவில் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகள் விஜயஸ்ரீ, 21; தனியார் கல்லுாரியில், 3ம் ஆண்டு பி.இ., படித்து வருகிறார். கடந்த, 31 மாலை, கல்-லுாரியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டி-ருந்த மாணவியை, காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.


இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிங்க-ளாந்தபுரத்தை சேர்ந்த மேஸ்திரி தமிழ்பாண்-டியன், 32, என்பவர் மாணவியை கடத்தியது தெரியவந்தது.


இந்நிலையில், விஜயஸ்ரீயை கடத்திய தமிழ்-பாண்டியன், தன்னுடன் வேலை பார்த்த தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பூவரசன், 34, மாயக்கண்ணன், 27 ஆகியோர் வீடுகளுக்கு சென்று தங்கி இருப்பது தெரியவந்தது. நேற்று காலை, பூவரசன் வீட்டிற்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர்.
மேலும், மாணவியை கடத்திய தமிழ்பாண்-டியன், கடத்தலுக்கு உதவிய சிங்களாந்தபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 25, கார்த்திக், 32, மோகனுார், ஆரியூரை சேர்ந்த ரமேஷ், 31, தங்கு-வதற்கு வீடு கொடுத்த பூவரசன், மாயக்கண்ணன் ஆகிய, 6 பேரையும் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், டூவீலர் ஆகிய-வற்றையும் பறிமுதல் செய்தனர். மாணவியை, விசாரணைக்குபின் பெற்றோரிடம் ஒப்படைத்-தனர்.

Advertisement