மாடு வரத்து குறைந்தது
அமராவதிபாளையத்தில் கடந்த வாரம் நடந்த சந்தைக்கு 908 மாடுகள் வந்தன. நேற்று நடந்த சந்தைக்கு 874 மாடுகள் மட்டுமே வந்தன. கன்றுக்குட்டி, 6,000 - 7,000, காளை, 23 ஆயிரம் - 28 ஆயிரம், எருமை 28 ஆயிரம் - 31 ஆயிரம், பசுமாடு 30 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. சுபமுகூர்த்தம், அடுத்தடுத்த விசேஷங்களால், மாடு வரத்து குறைந்தது. கேரள வியாபாரிகளும் குறைவாகவே வந்தனர். நேற்று, 1.25 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது என சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement