பழனி முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்

பழனி:திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோவிலில் துவங்க உள்ளது.

இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று கொடி மண்டபத்தில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருள்வார். பின், காலை 10:50 மணிக்கு மேல் காலை 11:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. இரவு, புதுச்சேரி சப்பரத்தில் ரதவீதி உலா நடக்கும்.

பிப்., 14ல், கொடி இறக்குதலுடன் திருவிழா முடிவடைகிறது. விழா நாட்களில் பல வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கும்.

Advertisement