திருவள்ளூர்:புகார் பெட்டி; நுழைவாயில் கதவு இல்லாத மவுத்தம்பேடு அரசு பள்ளி
நுழைவாயில் கதவு இல்லாத மவுத்தம்பேடு அரசு பள்ளி
மீஞ்சூர் அடுத்த, மவுத்தம்பேடு கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில், 40க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தின் முகப்பில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, இரும்பு கதவுகள் பொருத்தபடாமல் உள்ளது.
நுழைவாயில் பகுதி திறந்த நிலையில் இருப்பதால், பள்ளி செயல்படாத நேரங்களில், வெளி நபர்கள் அங்கு வந்து விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கால்நடைகளும் பள்ளி வளாகத்திற்கு வந்து செல்கின்றன. நுழைவாயில் பகுதியில் கதவு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.ஜி.கிருஷ்ணா,
மீஞ்சூர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement