நிலுவை பத்திரம் பெற முகாம்ரூ.16 லட்சம் வசூல்
நிலுவை பத்திரம் பெற முகாம்ரூ.16 லட்சம் வசூல்
ஓமலுார்,:ஓமலுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில், வருவாய் மீட்பு சட்டத்தில் நிலுவை பத்திரங்கள் பெற சிறப்பு முகாம் நேற்று நடந்தது. சேலம் துணை பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி தலைமை வகித்தார். அதில் ஓமலுார், மேச்சேரி, மேட்டூர், தாரமங்கலம் சார் - பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் சேர்ந்து, முகாம் நடந்தது. இதில் மக்கள் பலரும் பணம் செலுத்தி, பத்திரங்களை பெற்றுக்கொண்டனர்.
நிலுவை முத்திரைத்தாள்கள் தீர்வு காணப்பட்டு, 16 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஓமலுார் சார் - பதிவாளர் அலுவலகம் மூலம் மட்டும், 12.50 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மாவட்ட பதிவாளர் கனகராஜ்(நிர்வாகம்), முத்திரைத்தாள் தனி துணை கலெக்டர் ரவிச்சந்திரன், ஓமலுார் சார் பதிவாளர் பாஸ்கர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement