இன்றும், நாளையும் 3 டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரிக்கும்

சென்னை:'தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 12 வரை பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். இன்று ஒருசில இடங்களில், அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்க வாய்ப்புஉள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக இருக்கும்; காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement