பஞ்சுபேட்டை கால்வாய் துார்வார கோரிக்கை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848685.jpg?width=1000&height=625)
பஞ்சுபேட்டை:காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, பஞ்சுபேட்டையில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணை விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் மண்டி கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.
இதனால், மழைநீர் முழுமையாக வெளியேறாமல் கால்வாயில் தேங்கியுள்ளது. பலத்த மழை பெய்தால் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியை சூழும் நிலை உள்ளது.
எனவே, கருப்படிதட்டடை ஊராட்சியில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் மண்டியுள்ள செடி, கொடிகளை அகற்றி, மண்கால்வாயை கான்கிரீட் கால்வாயாக அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேங்கைவயல் போல மற்றொரு சம்பவம்: திருச்சி தண்ணீர் தொட்டியில் மலம் வீச்சு
-
தொகுதி சீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பு: கேரளாவில் உதயநிதி பேச்சு
-
வாய்க்கு வந்ததை பேசினால் சிக்கல் தான்: நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
-
தி.மு.க.,வும் பா.ஜ.,வும் ஒன்று நடிகர் விஜய் ஆவேச தாக்கு
-
எதிர்க்கட்சிகள் திசை திருப்புவதாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
-
மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தம்: மாற்றுத்திறனாளிகள் அவதி
Advertisement
Advertisement