கணவர் மாயம்;மனைவி புகார்


கணவர் மாயம்;மனைவி புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் கவிதா, 38. இவருடைய கணவர் கருணாநிதி, 42. இவர், வீட்டின் அருகில் உள்ள கவியரசு என்பவரிடம் கடனாக பணம் பெற்றார். அதை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த, 5 இரவு 7:00 மணியளவில் கடைக்கு சென்ற கருணாநிதி திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்க வில்லை. இதுகுறித்து கவிதா கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement