போக்குவரத்து அலுவலர் பணியின்போது மரணம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848809.jpg?width=1000&height=625)
கும்மிடிப்பூண்டி:சோதைனைச்சாவடி பணியில் இருந்த போக்குவரத்து அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பூந்தமல்லி அடுத்த, சென்னீர்குப்பம் பகுதியில் வசித்தவர் செந்தில்குமரன், 54; கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், வட்டார போக்குவரத்து அலுவலராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று பணியில் இருந்தபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சோதனைச்சாவடி வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாயிலாக, நல்லுார் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரதணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்
-
காங்கோவில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை
-
கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின கூட்டம்
-
குமுளி மலைப்பாதையில் மண் சரிவு மழைக்கு முன் சீரமைக்க வலியுறுத்தல்
-
பழநி யாத்திரை சுகமானது: நல்ல பலனை தரும்; முன்னாள் நீதிபதி பேச்சு
-
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை! முஜிபுர் ரஹ்மானின் வீடு தீயிட்டு எரிப்பு
-
விழிப்புணர்வு