மத்திய பட்ஜெட் நகல் கிழித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; மத்திய பா.ஜ., அரசின் பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பட்ஜெட் நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.

எம்.எல்.எப்., மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொது செயலாளர் நடராஜன், சி.ஐ.டி.யு., மாவட்ட பொதுசெயலாளர் ரங்கராஜ், எல்.பி.எப்., மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி, ஐ.என்.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சிவசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement